
கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு ஏற்பட்ட பிரச்சினைகளும், சர்ச்சைகளும் இன்னும் தீராமல் உள்ளது. ஜடேஜாவிடம் இருந்த கேப்டன்சி மீண்டும் தோனியிடம் கொண்டு வந்த போதும், ப்ளே ஆஃப் கூட முன்னேறாமல் வெளியேறியது.
சென்னை அணி மோசமான நிலையில் இருப்பதால் அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனி விளையாடுவாரா என்ற அப்போதே கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்திருந்த தோனி, நிச்சயம் 2023ஆம் ஆண்டு ஐபிஎல்-ல் சிஎஸ்கே உடையில் இருப்பேன் உள்ளேன். ஆனால் எந்த பதவியில் இருப்பேன் என்பதை இப்போது கூற முடியாது என சூசகமாக கூறியிருந்தார். இதனால் ஆலோசகராக தோனி செயல்படவுள்ளார் என கூறப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி தான் மீண்டும் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.