தோனி தனது ஓய்வு குறித்து எந்த தகவலையும் வெளிப்படுத்தவில்லை- ஸ்டீபன் ஃபிளமிங்!
நடப்பு ஐபில் தொடரோடு ஓய்வுபெறுவதாக எம்எஸ் தோனி இதுவரை எந்தவித தகவலையும் வெளிப்படுத்தவில்லை என சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் தெரிவித்துள்ளார்.

MS Dhoni To Retire After IPL 2023? Stephen Fleming Gives Big Update! (Image Source: Google)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் சென்னை அணி 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்விகளுடன் உள்ளது. அதுமட்டுமல்லாமல் நடப்பு ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இரு போட்டிகளில் சென்னை அணி தோல்வியடைந்துள்ளது.
ஏனென்றால் நடப்பு ஐபிஎல் தொடரில் 35 பந்துகளை எதிர்கொண்டு 8 சிக்சர்களை தோனி பறக்கவிட்டுள்ளார். இந்த நிலையில் சென்னை அணியின் தோல்விக்கு பின் பயிற்சியாளர் ஃபிளமிங் செய்தியாளர்களை சந்தித்த போது, “தோனி இந்த சீசனோடு ஓய்வுபெறுவதாக பேச்சுகள் அடிபடுகிறது. இதுகுறித்து ஓய்வறையில் தோனி ஏதேனும் தகவலை வெளிப்படுத்தினாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ஒரே வார்த்தையில், எந்த தகவலையும் வெளிப்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.
இதனால் தோனி அடுத்த சீசனிலும் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே ஒவ்வொரு போட்டியின் போதும் தோனியை பார்க்கவும், அவருக்கு கடைசியாக ஒருமுறை விடையளிக்கவும் ரசிகர்கள் மைதானங்களில் கூடி வருகின்றனர். இதனை தோனி பல்வேறு போட்டிகளில் வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News