
சிஎஸ்கே அணியின் இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் சவுத்ரி. இவர் சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடும் போது தனக்கு கிடைத்த ஆதரவு குறித்து தற்போது வெளிப்படையாக பேசியுள்ளார். தற்போது 26 வயதான முகேஷ் சவுத்ரி கடந்த ஆண்டு விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக சென்னை அணியால் 20 லட்சம் ரூபாய் என்கிற அடிப்படை விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
அவரது திறனை உணர்ந்த தோனி அவருக்கு சிஎஸ்கே அணி விளையாடும் வாய்ப்பினையும் அளித்தார். அதன்படி நடைபெற்று முடிந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடிய அவர் 16 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.
இந்நிலையில் சிஎஸ்கே அணியில் தனக்கு வாய்ப்பு கிடைத்தது குறித்தும், தோனியின் ஆதரவு குறித்தும் பேசிய முகேஷ் சவுத்ரி கூறுகையில், “நான் சென்னை அணிக்காக விளையாடுவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால் சென்னை அணிக்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டு பேருந்தில் முதல்முறையாக பயணித்த போது தோனி என்னுடைய தோளின் மீது தட்டி நீ சிறப்பாக விளையாடுவாய் என்று ஊக்கப்படுத்தினார். அப்போதுதான் நான் அவருடன் இருக்கிறேன் என்று புரிந்தது. அப்போது நான் மிகவும் பெருமையாக உணர்ந்தேன்.