Advertisement
Advertisement
Advertisement

ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய எம் எஸ் தோனி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது ரசிகருக்காக செய்த காரியம், ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan June 01, 2022 • 12:39 PM
MS Dhoni wins our hearts all over again as he meets CSK's specially-abled fan!
MS Dhoni wins our hearts all over again as he meets CSK's specially-abled fan! (Image Source: Google)
Advertisement

நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் எதிர்பார்த்தது போல் சிஎஸ்கே அணிக்கு அமையவில்லை. இந்த நிலையில், நடப்பு சீசனுக்கு பிறகு கேப்டன் தோனி முதல் முறையாக சென்னைக்கு வந்துள்ளார்.

தோனி திருமண நிகழ்ச்சி அல்லது டிஎன்பிஎல் குறித்து பங்கேற்பதற்காக சென்னை வந்ததாக தகவல் வெளியானது.

Trending


ஆனால், நேரடியாக சென்னையில் தனது மாற்றுத் திறனாளி ரசிகையை தோனி அவரது இல்லம் தேடி சென்று சந்தித்தார். அப்போது லாவண்யா என்ற அந்த ரசிகை, தோனியின் ஓவியத்தை வழங்கினார். இதனை பார்த்த தோனி அவருக்கு கைக் கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள லாவண்யா, என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் இது என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

தோனியை பார்த்ததை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை. அவர் மிகவும் எளிமையாகவும், பழுகுவதற்கு இனிமையான மனிதராக இருந்தார். என் பெயரின் ஸ்பெலிங்கை கேட்டு அறிந்தார். அப்போது என் கண்ணில் வழிந்த நீர்த்துளியை துடைத்துவிட்ட தோனி, அழக்கூடாது என்று சொன்னார்.

இது என் வாழ்நாளில் ஆசிர்வதிக்கப்பட்ட தருணம். தோனி என்னுடன் பேசிய வார்த்தைகளை எப்போதும் என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். சாகும் வரை தோனியின் ரசிகையாக தான் இருப்பேன் என்றும் இந்த பெண் தெரிவித்துள்ளார். 

 

ரசிகை வீட்டுக்கு தோனி அடித்துள்ள சர்ப்பிரைஸ் விசிட் காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும் இணையம் முழுவதும் தோனியின் இந்த செயல் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement