Advertisement

இவர் கிடைச்சத்து மும்பையின் அதிர்ஷ்டம் - சபா கரீம்

இந்திய அணியின் முன்னாள் வீரரும், தேர்வுக் குழு உறுப்பினருமான சபா கரிம் மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 19, 2021 • 10:43 AM
Mumbai Indians Lucky to Have Suryakumar Yadav: Saba Karim
Mumbai Indians Lucky to Have Suryakumar Yadav: Saba Karim (Image Source: Google)
Advertisement

கரோனா பாதிப்பு காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட 14ஆவது சீசன் ஐபிஎல் தொடர் இன்று முதல் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இன்று நடைபெறும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. 

இந்நிலையில் இந்த தொடர் குறித்தும், இன்றைய போட்டி குறித்தும் பல்வேறு கருத்துகளை பல்வேறு முன்னாள் வீரர்களும், நிபுணர்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் என பலரும் அளித்து வருகின்றனர்.

Trending


அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரும், தேர்வுக் குழு உறுப்பினருமான சபா கரிம் மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர்,“மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூர்யகுமார் யாதவ் போன்ற ஒரு பேட்ஸ்மேன் கிடைத்தது அவர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றே கூறலாம். ஏனெனில் மூன்றாவது அல்லது நான்காவது வரிசையில் களமிறங்கும் சூர்யகுமார் யாதவ் களத்தில் நீண்ட நேரம் நின்று தொடர்ச்சியாக ரன்களை குவிப்பவர்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

அதுமட்டுமின்றி தேவைப்படும்போது பவுண்டரிகளை விளாசும் ஆற்றலும் உடையவர். மும்பை அணியின் பேட்டிங் வரிசையில் பலமே சூரியகுமார் என்றால் அது மிகை அல்ல. ஏனெனில் அவர் நிலையாக நின்று ரன்களை குவித்து வருகிறார். அதிலும் குறிப்பாக தற்போது இந்திய அணிக்கு அறிமுகமாகி மீண்டும் திரும்பி வந்துள்ளதால் அவருடைய தன்னம்பிக்கை தற்போது உச்சகட்டத்தில் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement