பியூஷ் சாவ்லாவின் தந்தை கரோனாவால் உயிரிழப்பு!
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லாவின் தந்தை கரோனா தொற்றால் இன்று உயிரிழந்தார்.

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா. இவர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் பியூஷ் சாவ்லாவின் தந்தை பிரமோத் குமார் கடந்த சில நாள்களுக்கு முன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இத்தகவலை பியூஷ் சாவ்லா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்தார்.
பியூஷ் சாவ்லாவின் பதிவில், “அவர் இல்லாமல் எனது பயணம் இருக்காது. எனது அஸ்திவாரத்தின் தூண் இன்று இல்லை’ என்ற உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட கிரிக்கெட் அணிகளும், சக கிரிக்கெட் வீரர்களும் பியூஷ் சாவ்லாவிற்கு தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now