
பாகிஸ்தான் அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதல் 2 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷாஃபிக் 2 மற்றும் ஃபகர் ஸமான் 26 ஆகிய இருவருமே ஏமாற்றமளித்தனர். 3ஆம் வரிசையில் இறங்கிய பாபர் ஆசாம் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் அகா சல்மான் 24, குஷ்தில் ஷா 2, முகமது ஹாரிஸ் 4 ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஒருமுனையில் நிலைத்து ஆடிய கேப்டன் பாபர் அசாம் 91 ரன்களை குவித்தார். 9 ரன்னில் சதத்தை தவறவிட்டு 91 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் பாபர் ஆசாம். பின்வரிசையில் முகமது நவாஸ் 27 ரன்கள் அடித்தார். இதனால் பாகிஸ்தான் அணி 49.4 ஓவரில் 206 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.