
இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ். தற்போது, 32 வயதான சூரியகுமார் தற்போது டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் வீரராக வளம் வருகிறார். ஆனால் சூரிய குமாரை ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதுவரை 20 சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள சூர்யகுமார் வெறும் 43 ரன்கள் தான் எடுத்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 28 ரன்கள் தான்.
சூரிய குமாரியாதவ் ஒரு நாள் கிரிக்கெட்டில் 2 அரைசதம் மட்டுமே அடித்திருக்கிறார். இந்த நிலையில் சூரிய குமார் யாதவ் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் முக்கியமான வீரராக வாய்ப்பிருப்பதாக ஆஷிஸ் நெஹ்ரா கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “சூரியகுமார் தன்னுடைய பார்மை அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் வெளிப்படுத்துவார் என நான் நம்புகிறேன். ஏனென்றால் அதற்கான திறமை அவரிடம் இருக்கிறது. அவர் சில ஒரு நாள் போட்டிகளில் தான் விளையாடி இருக்கிறார். தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை ஒரு நாள் கிரிக்கெட்டிலும் வெளிப்படுத்தி அவருக்கென ஒரு இடத்தை பிடிப்பார். இதனால் பல வீரர்கள் அவர்களுடைய முழு திறமையை வெளிப்படுத்தி தங்களுடைய ஆட்டத்திறனை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.