
New Zealand just killed Pakistan cricket: Shoaib Akhtar (Image Source: Google)
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் இன்று நடைபெற இருந்தது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் பாதுகாப்பு காரணங்களினால் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இத்தொடரை ரத்துசெய்வதாக அறிவித்தது.
மேலும் தங்கள் நாட்டு வீரர்களை பாதுகாப்பாக நாடு திரும்பவும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் சர்வதேச கிரிக்கெட் அரங்கி பூதாகரமாக வெடித்துள்ளது. ஏனெனில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் அணியுடனான தொடரை ரத்து செய்யும் நோக்கில் ஆலோசனையில் ஈடபடத்தொடங்கியுள்ளது.
இந்நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட்டை கொன்றதாக அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் சோயப் அக்தர் காட்டமாக தெரிவித்துள்ளார்.