
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கௌகாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய நிதீஷ் ரானா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 21 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். மேற்கொண்டு அதிரடியாக விளையாடி10 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 81 ரன்களைச் சேர்த்ததன் காரணமாக இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் நிதீஷ் ரானா வென்றார். சிஎஸ்கேவுக்கு எதிராக அதிரடியாக விளையாடிய நிதீஷ் ராணாவை நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய வில்லியம்சன், “சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நிதிஷ் ரானா ஒரு அற்புதமான வீரர். ஆனால் இப்போட்டியில் அவர் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பான் ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது இன்னிங்ஸைத் தொடங்கினார். மேற்கொண்டு அவர் ஸ்கெயர் திசையில் மிகவும் வலுவான வீரராக தெரிந்தார். அதேசமயம் இடது வலது பேட்டிங் காரணமாக அவருக்கு மூன்ராம் இடத்தில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.