
உலகக்கோப்பைத் தொடருக்கு இன்னும் 2 மாதங்கள் கூட இல்லாத நிலையில், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யார் என்பதில் தெளிவில்லாமல் இருக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு முன்பாகவும் நம்பர் 4 வரிசையில் யார் களமிறங்குவார்கள் என்ற கேள்விக்கு, கடைசி வரை இந்திய அணி விடைதெரியாமல் இருந்தது. அதேபோல் ஆட்டத்தை தான் மீண்டும் பிசிசிஐ விளையாடி வருகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அளித்துள்ள நேர்காணலில், “நம்பர் 4 பேட்ஸ்மேன் யார் என்பதில் இந்திய அணிக்கு நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. யுவராஜ் சிஙகிற்கு பின் எந்த வீரரும் நம்பர் 4 வீரராக செட்டிலாகவில்லை. நீண்ட காலத்திற்கு பின் அந்த இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக செயல்பட்டார். 20 போட்டிகளில் 805 ரன்களை விளாசி இருக்கிறார். ஆனால் தற்போது வீரர்களின் காயம் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 4 முதல் 5 ஆண்டுகளாக இதுதான் நிலைமையாக உள்ளது. ஏராளமான வீரர்கள் காயமடையும் போது, புதிய வீரர்கள் அந்த இடத்தில் விளையாட வேண்டிய நிலை ஏற்படுகிறது. நான் கேப்டனாக இல்லாத போது கூட நம்பர் 4 பேட்ஸ்மேன்களை கவனித்து வந்திருக்கிறேன். நிறைய வீரர்கள் வருவதும் போவதுமாகவே இருக்கிறார்கள். சில நேரங்களில் காயமடைகிறார்கள் அல்லது ஃபார்மில்லாமல் அணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.