Advertisement
Advertisement
Advertisement

ஷாஹீன் அஃப்ரிடியைக் கண்டு பயப்பட தேவையில்லை - டேனிஷ் கனேரியா!

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடியை இந்திய அணியின் இந்த மூன்று அதிரடி பேட்ஸ்மேன்கள் சமாளித்து விடுவார்கள் என்று டேனிஷ் கனரியா தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan August 11, 2022 • 12:00 PM
'No need to be afraid of Shaheen Afridi. Kohli, Rohit need to...': Ex-Pakistan cricketer ahead of In
'No need to be afraid of Shaheen Afridi. Kohli, Rohit need to...': Ex-Pakistan cricketer ahead of In (Image Source: Google)
Advertisement

கடந்த 2021 டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி வெல்லும் என்று பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்த நிலையில், ஒட்டுமொத்த இந்தியர்களின் கனவை சுக்குநூறாக்கிய பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் சஹின் அப்ரிடி, இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோஹித் சர்மா,விராட் கோலி,கே எல் ராகுல் ஆகியவர்களின் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணியை சீர்குழைய வைத்தார். 

இதனால் இந்திய அணி உலக கோப்பை தொடரை வெல்லும் கனவு முற்றிலுமாக சிதைந்தது. இந்த நிலையில் வரும் 28ஆம் தேதி நடைபெறும் ஆசிய கோப்பையிலும் இதே போன்று ஒரு நிகழ்வு மீண்டும் ஏற்பட்டு விடுமோ என்று இந்திய ரசிகர்கள் உட்பட கிரிக்கெட் விமர்சகற்களும் தங்களுக்கு மத்தியில் விவாதித்து வருகின்றனர்.

Trending


ஆனால் நல்ல பார்மில் இருக்கும் இந்திய வீரர்கள், சகின் அப்ரிடியின் பந்துவீச்சை எளிதாக சமாளித்து விடுவார்கள் என்று இந்திய அணிக்கு ஆதரவாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனரியாவே, ஷாஹின் அஃப்ரிடியின் பந்துவீச்சை இந்திய அணி வீரர்கள் சமாளித்து விடுவார்கள் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய டேனிஷ் கனேரியா “ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் இருக்கும் வரை ஷாஹின் அஃப்ரிடியை பார்த்து பயப்படத் தேவையில்லை, இந்திய வீரர்கள் ஷாஹின் அஃப்ரிடி வீசும் ஸ்விங் பந்துகளில் கூடுதல் கவனம் செலுத்தினால் போதும், அவர்கள் எப்படிப்பட்ட நிலையை சமாளிக்க துணிந்தவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக உடம்பில் போடப்படும் பந்து மற்றும் லெக்-சைடில் போடப்படும்  பந்தை கையாள தெரிந்திருக்க வேண்டும்.

ஷாஹின் அஃப்ரிடிக்கு எதிராக சூரியகுமார் யாதவ் ஸ்கொயர்-லெக்கில் அடிக்கும் பிலிக் ஷாட் முக்கியமான ஒன்றாக இருக்கும்.  உலகக் கோப்பை தொடர்க்கு பின் தினேஷ் கார்த்திக் விளையாடுவதற்கான வாய்ப்புகள் கிடையாது என்னை பொறுத்தவரையில் தினேஷ் கார்த்திக் ஆசிய கோப்பையில் மிக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20 உலக கோப்பை தொடரில் இடம் பெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பெரும்பாலானவர்கள் தினேஷ் கார்த்திக்கின் உடற்தகுதியையும், அவருடைய ஃபார்மையும், பினிஷிங்கையும் கவனித்துக்கொண்டு வருகினறனர். தினேஷ் கார்த்திகைத் தவிர்த்து ஹர்திக் பாண்டியாவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். இது இவர்களுடைய கடைசி டி20 உலக கோப்பை தொடராகவும் இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement