
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதல் ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் முதல் ஓவரின் 3ஆவது பந்தில் டேரல் மிட்சலை ரன் எதுவும் அடிக்க விடாமல் ஆட்டமிழக்க வைத்து வெளியேற்றினார்.
அதன் பின்னர் மூன்றாவது வீரராக இந்த தொடரில் ஓய்வு எடுத்துக் கொண்ட கேப்டன் கேன் வில்லியம்சன்-க்கு பதிலாக இளம் வீரர் மார்க் சாப்மன் களமிறங்கினார். முதல் சில பந்துகளில் பொறுமையாக நிதானத்தை கடைபிடித்து அதன் பின்னர் அதிரடியாக விளையாடி இந்திய அணியை அசைத்துப் பார்க்கும் படி ஒரு அற்புதமான இன்னிசை விளையாடினார்.
50 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி 2 சிக்சர்கள் என 63 ரன்கள் அடித்து அசத்தினார். அவரது இந்த ஆட்டத்தை பார்த்த பிறகு நியூசிலாந்து அணியில் இப்படி ஒரு வீரர் இருக்கிறாரா என்றே எண்ண தோன்றுகிறது. மேலும் அவர் யார் என்ற தேடலில் ஈடுபட்ட போது சில சுவாரசியமான விசயங்கள் இருப்பது தெரியவந்தது.