முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை அணிக்கு 236 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 236 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை அணிக்கு 236 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா! (Image Source: Google)
இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இருவரும் பொறுப்புடன் விளையாடியதுடன் 4ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லாரா குட்ஆல் 46 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 31 ரன்களில் சுனே லூஸும் ஆட்டமிழந்தார். அதன்பின் இணைந்த சோலே ட்ரையான் மற்றும் அன்னேரி டெர்க்சன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சோலே ட்ரையான் 35 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய நதின் டி கிளார்க், மசபாடா கிளாஸ், நோன்குலுலேகோ மலாபா ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
Also Read: LIVE Cricket Scoreஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும் மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த அன்னேரி டெர்க்சன் தனது அரைசதத்தை பூர்த்தி செய்ததுடன், 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 61 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்களைச் சேர்த்தது. இலங்கை மகளிர் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மல்கி மதரா 4 விக்கெட்டுகளையும், தேவ்மி விஹங்கா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News