
இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் அவ்வபோது களத்தில் புதுவிதமாக செயல்பட்டு சர்ச்சையில் சிக்குவது வழக்கம். ஐபிஎலில் ஜாஸ் பட்லரை மான்கட்டிங் செய்து வெளியேற்றி பெரிய அளவில் கவனம் பெற்றார். இதனைத் தொடர்ந்து மான்கட்டிங் முறையை ஐசிசி அதிகாரப்பூர்வமானதாக மாற்றியுள்ளது.
அடுத்து இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போது, நடுவரை மறைத்துக்கொண்டு பந்துவீசியதாக களத்திலேயே நடுவர் எச்சரித்தார். இதனைத் தொடர்ந்து தான் விதிமுறைப்படிதான் செயல்படுகிறேன் என அஸ்வின் கூறியதும், நடுவர் எதுவும் பேசவில்லை.
இப்படி ரூல்ஸ் படி ஸ்ட்ரிட்டாக செயல்படும் அஸ்வின், 15ஆவது சீசனிலும் புதுவிதமாக செயல்பட்டார். டெத் ஓவர்களில் பேட்டிங் செய்த அவர், டயர்ட் ஆனதும் உடனே ரிட்டயர்ட் ஹர்ட் முறைப்படி வெளியேறி, புத்துணர்ச்சியுடன் அதிரடி பேட்ஸ்மேன்கள் களமிறங்க வழிவகை செய்தார். இப்படி அஸ்வின் தொடர்ந்து புதுவிதமாக செய்து வருவதால், இவர் மீது அதிகப்படியான விமர்சனங்கள் எழுந்துகொண்டுதான் இருக்கிறது.