
தீவிரவாத அச்சுறுத்தல்களால் பாகிஸ்தானுக்கு எந்தவொரு அணியும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல் இருந்து வருகின்றன. கடந்தாண்டு கூட நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் கூட சுற்றுப்பயணம் திட்டமிட்டு விட்டு பாதுகாப்பு குறைவு காரணமாக வெளியேறின.
இப்படிபட்ட சூழல் இருக்கும் போது தான் ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் அந்நாட்டிற்கு சென்றிருக்கும் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று இந்த போட்டி நடந்துக்கொண்டிருந்த போது, சில கிலோ மீட்டர் தூரம் அருகே உள்ள பெஷ்வார் பகுதியில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 50 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.