
Pakistan swept the T20I series against Sri Lanka after a close-fought victory in the third T20I (Image Source: Google)
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் மகளிர் அணி வெற்றிப்பெற்று தொடரை வென்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று கராச்சில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை மகளிர் அணிக்கு ஹாசினி பெரேரா - கேப்டன் அத்தபத்து இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர்.