
ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் ஐசிசி டி20 உலக கோப்பை 2022 தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு உலகின் அனைத்து அணிகளும் பல்வேறு இருதரப்பு டி20 தொடர்களில் பங்கேற்று வருகின்றன. அந்த வரிசையில் கடந்த முறை விராட் கோலி தலைமையில் நாக்-அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறிய இந்திய அணி இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்க தயாராகி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஐபிஎல் 2022 தொடருக்கு பின் தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த டி20 தொடர்களில் இந்திய அணி விளையாடியது.
வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்தவுடன் ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் இந்தியா விளையாடுகிறது. அதைத்தொடர்ந்து ஆசிய கோப்பையில் களமிறங்குகிறது. அந்த தொடர் வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுகிறது.