
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் 8ஆவது முறையாக இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது பாகிஸ்தான். முதல் இன்னிங்ஸ் ஆட்டம் முடிவடைந்த பின்னரே பாகிஸ்தான் வீரர்களின் உடல்மொழியில் மொத்தமாக பெரிய மாற்றம் ஏற்பட்டது.
அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்களை நம்பாமல் திடீரென ஸ்பின்னர்களை அட்டாக்கில் கொண்டு வந்ததன் மூலமாக பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக் கொண்டதாகவே பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்திய அணியின் வெற்றிக்கும் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கும் அகமதாபாத் ரசிகர்களின் பங்கும் மறைமுகமாக உள்ளது.
ஏனென்றால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் டாஸ் போடுவதற்காக மைதானத்தில் களமிறங்கி நடந்து வந்த போதே இந்திய ரசிகர்கள் அவரை கலாய்க்க தொடங்கி வம்புக்கு இழுத்தார்கள். டாஸின் போது ரவி சாஸ்திரி எழுப்பிய கேள்விக்கு கூட பாபர் அசாமால் பதில் கூற முடியவில்லை. அதேபோல் பந்துவீச்சின் போது பாகிஸ்தான் அணி ஹாரிஸ் ராவுஃப் ஸ்ரேயாஸ் ஐயருக்கு சில பவுன்சர்களை விளாசி அச்சுறுத்தினார்.