
Pandya Says 'Legacy' Created After Debutants Gujarat Titans Win IPL 2022 (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த இறுதி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை மட்டுமே குவி க்க 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நிர்ணயிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து எளிய இலக்கினை துரத்தி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 133 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் அவர்கள் அறிமுக சீசனிலேயே ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளனர்.