Advertisement

'சிஎஸ்கேவின் துருப்புச்சீட்டு இவர் தான்' - பார்த்தீவ் படேல்

நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துருப்புச்சீட்டாக சுரேஷ் ரெய்னா செயல்படுவார் என முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 18, 2021 • 16:43 PM
Cricket Image for 'சிஎஸ்கேவின் துருப்புச்சீட்டு இவர் தான்' - பார்த்தீவ் படேல்
Cricket Image for 'சிஎஸ்கேவின் துருப்புச்சீட்டு இவர் தான்' - பார்த்தீவ் படேல் (Parthiv Patel (Image Source: Google))
Advertisement

இந்தியாவின் உள்ளூர் டி20 திருவிழாவான ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மொத்த எட்டு அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் 56 லீக் போட்டிகாள் நடைபெறவுள்ளன. லீக் போட்டிகளில் முதல் நான்கு இடங்கைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றில் மோதவுள்ளன. 

இந்நிலையில், இத்தொடரின் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்குக்கூட முன்னேறாமல் லீக் போட்டிகளுடன் வெளியாறியது. இதையடுத்து நடப்பு சீசனுக்கான பயிற்சிகளை சென்னை வீரர்கள் தொடங்கியுள்ளனர். 

Trending


இந்நிலையில், இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துருச்சீட்டாக அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா செயல்படுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய பார்த்தீவ் படேல், "கடந்த சீசனில் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் இருந்ததற்கான காரணம், தொடக்கத்தில் அந்த அணி வெற்றிகளைப் பெறத்தவறியது தான். ஆனால், கடைசி ஒரு சில போட்டிகளில் இளம் வீரர் ருதுராஜ் கெய்க் வாட் சில அற்புதமான இன்னிங்ஸ்களைக் கொடுத்து அணியை வெற்றிப் பெறச்செய்திருந்தார். இந்நிலையில் நடப்பு சீசனில் சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னா களமிறங்கவுள்ளதால், அவர் நிச்சயம் அணியின் துருப்புச்சீட்டாக செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஏனெனில் ஐபிஎல் தொடர்களில் அவரது ஆட்டத்தை நாம் கண்டிருக்கிறோம். 


Read More

Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement