
PBKS vs CSK: Ravindra Jadeja unhappy with bowlers after CSK's 11-run defeat (Image Source: Google)
ஐபிஎல் 15ஆவது சீசனின் 38ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
பிட்ச் வேகம் குறைந்த பந்துகளுக்கும், ஸ்பின்னிற்கும் சாதகமாக இருக்கும் என முன்பு கணிக்கப்பட்டிருந்தது. இறுதியில் அதேபோல்தான் நடந்தது. சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் துவக்கம் முதலே வேகம் குறைந்த பந்துகளை வீச ஆரம்பித்தார்கள். அதேபோல் ஸ்பின்னர் தீக்ஷனாவுக்கு பவர் பிளேவிலேயே ஓவர்கள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் மயங்க் அகர்வால் 18 (21) ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து ஷிகர் தவன் 88 (5), ராஜபக்சா 42 (32) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடித்தனர். தொடர்ந்து லிவிங்ஸ்டன் கடைசி நேரத்தில் 19 (7) ரன்கள் சேர்த்தார். இதனால், பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 187/4 ரன்களை குவித்தது.