Advertisement
Advertisement
Advertisement

ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய இந்திய வீராங்கனைகள்!

மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீராங்கனை பிஸ்பா மரூஃப்புடன் இந்திய வீராங்கனைகள் கொஞ்சி விளையாடிய சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan March 06, 2022 • 19:36 PM
Photos of Indian Women Cricket Team Bonding with Pakistan Skipper's Baby Win Hearts
Photos of Indian Women Cricket Team Bonding with Pakistan Skipper's Baby Win Hearts (Image Source: Google)
Advertisement

இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 244 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Trending


இந்தப் போட்டியில் பங்கேற்க வந்த பாகிஸ்தான் அணி கேப்டன் பிஸ்பா மரூஃப் தனது 6 மாத கைக் குழந்தையுடன் கிரிக்கெட் மைதானத்திற்கு வந்தார். போட்டிக்கு நடுவே தனது குழந்தையை பார்த்து கொண்டு, அவர் கிரிக்கெட் விளையாடியது ரசிகர்களிடையே பிரமிப்பில் ஆழ்த்தியது.

பிஸ்பா மரூஃப் குழந்தை அவ்வப்போது இந்திய வீராங்கனைகள் கொஞ்சி , கொஞ்சி விளையாடினர். இந்த நிலையில் போட்டி முடிந்ததும், பாகிஸ்தான் கேப்டன் மரூஃபை பார்ப்பதற்காக இந்திய வீராங்களை அனைவரும் பாகிஸ்தான் வீராங்கனைகளின் அறைக்கு சென்றனர்.

அப்போது , குழந்தை பாத்திமாவுடன் சுற்றி நின்ற இந்திய வீராங்கனைகள், அவருடன் கொஞ்சி, விளையாடினர். இதனையடுத்து குழந்தை பாத்திமாவுடன் இந்திய வீராங்கனைகள் போட்டோவும், வீடியோவும் எடுத்து கொண்டனர். 

இந்திய வீராங்கனைகளின் இந்த செயல் கிரிக்கெட் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. களத்தில் ஆக்கோரஷமாக விளையாடினாலும், களத்துக்கு வெளியே, ஒரு குடும்பம் போல், நண்பர்கள் போல் இரு நாட்டு வீராங்கனைகளும் இருந்தனர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement