
Player To Be Out Of England Tour If Tested Positive On Mumbai Arrival: BCCI (Image Source: Google)
நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 4 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, இந்த சீசன் பாதியிலேயே தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில் இங்கிலாந்து செல்லும் வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு எவ்வித உதவியும் பிசிசிஐ வழங்காது என புதிய நிபந்தனை ஒன்றை விதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.