
ஐபிஎல் தொடரின் 44ஆவது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீசுவதாக தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே குவித்தது. பின் வெற்றியை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணியானது பிளே ஆஃப் வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் வெற்றி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி கூறுகையில், “கடந்த ஆண்டு நாங்கள் தொடர்ச்சியான தோல்விகளை பெற்றபோது மீண்டும் பலமாக திரும்பி வருவோம் என்று கூறியிருந்தோம்.