
PM Narendra Modi to attend IPL 2022 final (Image Source: Google)
பல ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் நிறைவு விழா நடைபெறுகிறது. இதில் அனைவரின் கவனமும் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் வருகை மீது திரும்பியுள்ளது.
இந்தப் போட்டியில் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் பார்வையாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஐபிஎல் போட்டியில் தொடக்க விழா, நிறைவு விழா ஆகியவற்றில் பணத்தை செலவிட வேண்டாம் என்று பிசிசிஐ முடிவு எடுத்தது. ஆனால் தற்போது நிறைவு விழா நடத்தப்பட காரணம், மத்திய அரசின் 75ஆவது ஆண்டு சுதந்திர விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தான், பிசிசிஐ இந்த நிறைவு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதனால் தான் பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.