Advertisement

பிஎஸ்எல் 2022 இறுதிப் போட்டி: முகமது ஹபீஸ் அரைசதம்; முல்தான் சுல்தான்ஸுக்கு 181 ரன்கள் இலக்கு!

பிஎஸ்எல் 2022 : முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 27, 2022 • 21:53 PM
PSL 2022 Final: Lahore Qalandars finishes off 180/5
PSL 2022 Final: Lahore Qalandars finishes off 180/5 (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் நடப்பாண்டு சீசன் இன்றுடன் நிறைவடைகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் இறுதிப்போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 

இப்போட்டியில் டாஸ் வென்ற லாகூர் கலந்தர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. ஆனால் அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஃபகர் ஸமான், அப்துல்லா ஷஃபிக் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

Trending


அதன்பின் களமிறங்கிய ஸிசான் அஸ்ரஃப், காம்ரன் குலாம் ஆகியோரும் வந்தவேகத்திலேயே நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த முகமது ஹபீஸ் - ஹாரி ப்ரூக் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 

இதில் முகமது ஹபீஸ் அரைசதம் கடந்தார். பின்னர் 69 ரன்களில் அவரும் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் லாகூர் கலந்தர்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களைச் சேர்த்தது.

இதில் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த ஹாரி ப்ரூக் 41 ரன்களுடனும், டேவிட் வைஸ் 28 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சுல்தான்ஸ் அணி தரப்பில் ஆசிஃப் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement