
பாகிஸ்தானின் உள்ளூர் டி20 கிரிக்கெட் லீக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியிலுள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய கராச்சி அணிக்கு கேப்டன் ஷான் மசூத் - டிம் செய்ஃபெர்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிம் செய்ஃபெர்ட் 8 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து லூயிஸ் டு ப்ளூய் 24 ரன்களிலும், கேப்டன் ஷான் மசூத் 27 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய அனுபவ வீரர் சோயப் மலிக் மற்றும் முகமது நவாஸ் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த அனுபவ வீரர் கீரென் பொல்லார்ட் - இர்ஃபான் கான் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தி வந்தனர். அதிலும் இறுதி கட்டத்தில் இருவரும் அதிரடியாக விளையாடி பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.