
‘Rahane fortunate he is still part of the Test side’: Gautam Gambhir (Image Source: Google)
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி கான்பூரில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, பும்ரா, ஷமி ஆகிய சீனியர் வீரர்கள் மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
முதல் டெஸ்ட்டில் கேப்டன் விராட் கோலி ஆடவில்லை; 2ஆவது போட்டியில் தான் கோலி ஆடுகிறார். அதனால் முதல் டெஸ்ட்டில் அஜிங்க்யா ரஹானே கேப்டன்சி செய்கிறார். மேலும் காயம் காரணமாக கேஎல் ராகுலும் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில், ரஹானே கேப்டனாக இருப்பதால் தான் இன்னும் இந்திய அணியில் அவரால் ஆடமுடிகிறது என்றும், இது அவரது அதிர்ஷ்டம் என்றும் கவுதம் கம்பீர் கூறியிருக்கிறார்.