அடுத்த சீசனிலும் தோனி விளையாடுவார் - சுரேஷ் ரெய்னா!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 2024 சீசனிலும் விளையாட முடியும் என அந்த அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

Raina addresses whether IPL 2023 is MS Dhoni's last season for CSK! (Image Source: Google)
நடப்பாண்டுக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வரும் மே 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த சீசனில் அனைத்து அணிகளும் ஹோம் மைதானத்தில் விளையாடும் எனக்கூறியதால் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு இது கூடுதல் மகிழ்ச்சியாகும்.
இந்நிலையில் சுரேஷ் ரெய்னா கூறுகையில், “தோனி அடுத்த ஆண்டு கூட ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடலாம். அது குறித்த விவரம் யாருமே அறிந்திருக்க மாட்டோம். அவரது உடற்திறன் மற்றும் பேட்டிங் செய்வதை பார்க்கும்போது அது நடக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. ஆனாலும், அது இந்த சீசனில் அவரது பேட்டிங் செயல்பாட்டை கொண்டே முடிவு செய்யப்படும்.
வலைப்பயிற்சியில் அவர் பறக்கவிடும் சிக்ஸர்களை பார்த்தால் நிச்சயம் அணியின் வெற்றிக்கு அவர் தனது பங்களிப்பை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் போட்டிகளில் விளையாடி ஓராண்டு காலம் ஆகிறது. அதனால் அது கொஞ்சம் சவாலாக இருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News