
அசத்தலாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடர் ஒரு மாதங்களாக மும்பை நகரில் பல திரில்லர் திருப்பங்களுடன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த தொடரில் ஏப்ரல் 30ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 44ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை 8 தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து முதல் வெற்றியை பதிவு செய்து நிம்மதி அடைந்தது.
இருப்பினும் கூட ஏற்கனவே 8 தோல்விகளை பதிவு செய்து விட்டதால் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்துள்ள ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்த வருடம் ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுடன் வெளியேறுவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் ஜோஸ் பட்லரின் ஆட்டம் மட்டுமே அந்த அணியின் ரசிகர்களை கொஞ்சம் குஷிப்படுத்தியது. இந்த போட்டி மட்டுமல்லாது இந்த வருடம் இதுவரை பங்கேற்ற 9 போட்டிகளில் 3 அரை சதங்கள் 3 சதங்கள் உட்பட 566* ரன்களை 70.75 என்ற அற்புதமான சராசரியில் 155.07 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் குவித்து ரன் மழை பொழிந்து வரும் அவர் ஆரஞ்சு தொப்பியை தன்னகத்தே வைத்துள்ளார்.