ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஸ்டீஃபன் ஜோன்ஸ் நியமனம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஸ்டீஃபன் ஜோன்ஸ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீஃபன் ஜோன்ஸ். இவர் கவுண்டி கிரிக்கெட் தொடரில் சோமர்செட், நார்த்தாம்டன்ஷையர், டெர்பிஷையர் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் செயல்பட்டார். இந்நிலையில் அவரது பதிவிக்காலம் இந்தாண்டுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் ஸ்டீஃபன் ஜோன்ஸை மீண்டும் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிப்பதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாக இயக்குநர் குமார் சங்கக்காரா, “ஸ்டீஃபன் ஜோன்ஸை புதிய பாத்திரத்தில் அவரை மீண்டும் உரிமையாளருக்கு வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், அதில் அவர் எங்கள் பந்துவீச்சாளர்களுடன் இணைந்து பணியாற்றுவார் மற்றும் ஆண்டு முழுவதும் அவர்களுக்கு ஆதரவளிப்பார், மேலும் அவரது நிபுணத்துவம் எங்களை புதிய உயரத்திற்கு வழிநடத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now