Advertisement
Advertisement
Advertisement

லெஜன்ஸ்ட் லீக் கிரிக்கெட் தொடரின் ஆணையராக ரவி சாஸ்திரி நியமனம்!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைந்துள்ளதை அடுத்து, அவர் புதிய பொறுப்பு ஒன்றை ஏற்றுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 15, 2021 • 16:54 PM
Ravi Shastri Roped In As Legends League Cricket Commissioner
Ravi Shastri Roped In As Legends League Cricket Commissioner (Image Source: Google)
Advertisement

கடந்த 2017-ல் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். அதன்பிறகு ஆஸ்திரேலியாவில் இருமுறை டெஸ்ட் தொடர்களை வென்று சாதனை படைத்தது இந்திய அணி. இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. வெளிநாடுகளில் ஒருநாள், டி20 தொடர்களை வென்றது. 

ஒரே குறை, ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்த காலத்தில் இந்திய அணியால் உலகக் கோப்பைப் போட்டியை வெல்ல முடியவில்லை. 2014-16 காலகட்டத்தில் இந்திய அணியின் இயக்குநராகவும் அவர் பணியாற்றியுள்ளார். 

Trending


இந்திய பயிற்சியாளர் பதவிக்கு அடுத்ததாகப் புதிய பொறுப்பு ஒன்றை ஏற்றுக்கொண்டுள்ளார் ரவி சாஸ்திரி. லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் எனப்படும் எல்.எல்.சி. தொடரின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். எல்.எல்.சி. போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இதர நாடுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் பங்கேற்பார்கள். 

இந்தியா, ஆசியா, இதர நாடுகள் என அணிகள் மூன்றாகப் பிரிக்கப்படும். அடுத்த வருட ஜனவரி மாதம் வளைகுடாப் பகுதியில் இப்போட்டி நடைபெறவுள்ளது. 

Also Read: T20 World Cup 2021

இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, “முன்னாள் வீரர்கள் இனி எதுவும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு ரசிகர்களிடம் நல்ல மதிப்பு உள்ளது. தீவிரமான மற்றும் பொதுபோக்கான கிரிக்கெட் ஆட்டங்களை நாம் காணப் போகிறோம். லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி நிர்வாகத்தில் நானும் இடம்பெறுவதில் மகிழ்கிறேன். இது புதிய முயற்சி. இதற்கு நல்ல எதிர்காலம் உண்டு” என தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement