
Ravi Shastri Says This Player Should Have Become CSK Captain After MS Dhoni (Image Source: Google)
எம்எஸ் தோனி சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அதன்பின் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2022 சீசனில் ஒரு மோசமான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சீசனில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியடைந்துள்ளது. இந்த சீசனில் ஒரு புள்ளி கூட இல்லாமல், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் தள்ளாடி வருகிறது. தொடர் தோல்விகளை சந்தித்து திணறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சென்னையை தோற்கடித்து வெற்றிப்பாதைக்கு திரும்பி விட்டது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தென்னாப்பிரிக்கா நட்சத்திரம் ஃபாஃப் டு பிளெசிஸை விடுவித்ததில் சிஎஸ்கே தவறு செய்ததாகக் கூறினார்.