Advertisement

இந்த காரணத்தால் தான் நான் இரண்டாவது டெஸ்டில் விளையாடவில்லை - ரவிச்சந்திரன் அஸ்வின்

இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறாததற்கான காரணத்தை ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan August 20, 2021 • 17:33 PM
Ravichandran Ashwin Reveals He Was In Contention To Play Lord's Test
Ravichandran Ashwin Reveals He Was In Contention To Play Lord's Test (Image Source: Google)
Advertisement

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிரா ஆன நிலையில், 2ஆவது டெஸ்ட்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மூத்த சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடவில்லை. அந்த போட்டியில் அஸ்வின் விளையாடாததே கடும் விமர்சனத்துக்குள்ளானது. எந்த கண்டிஷனிலும் சிறப்பாக பந்துவீசக்கூடிய அஸ்வினை அணியில் எடுத்திருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்திய அணி தேர்வையும் விமர்சித்தனர்.

Trending


எனவே 2ஆவது டெஸ்ட்டில் அஸ்வின் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2ஆவது டெஸ்ட்டிலும் அஸ்வின் ஆடவில்லை. மறுபடியும் 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாடியது. 

இந்நிலையில், தான் அணியில் எடுக்கப்படாதது குறித்து பேசியுள்ள அஸ்வின்,“2ஆவது டெஸ்ட்டில் நான் ஆடுவதாக இருந்தது. அந்த போட்டியில் நான் ஆடுகிறேன் என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பாக திடீரென மழை பெய்துவிட்டதால், கண்டிஷனை கருத்தில் கொண்டு 4  வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஆட வேண்டியதாயிற்று” என்று தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement