
இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் அடித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா (29) மற்றும் மயன்க் அகர்வால் (33) ஆகிய இருவரும் இணைந்து ஓரளவிற்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதன்பின்னர் ஹனுமா விஹாரி அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். ஹனுமா விஹாரி 58 ரன்களும், கோலி 45 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 27 ரன்களும் அடித்தனர்.
228 ரன்களுக்கு இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 5 விக்கெட் விழுந்தபின்னர், இந்திய அணிக்கு மூன்று 100+ பார்ட்னர்ஷிப் அமைந்தது. அதற்கு முக்கிய காரணம் ரவீந்திர ஜடேஜா. ரிஷப் பந்த்- ஜடேஜா இணைந்து 6ஆவது விக்கெட்டுக்கு 104 ரன்களை சேர்த்தனர். ரிஷப் பண்ட் 96 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.