உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பயிற்சியைத் தொடங்கிய இந்திய அணி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி இன்று தங்களது பயிற்சிக்கு திரும்பியுள்ளது.

வரும் ஜூன் 18ஆம் தேதி இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி சவுத்தாம்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இத்தொடருக்கு விராட் கோலி தலைமையிலான 24 பேர் அடங்கிய இந்திய அணி ஜூன் 3ஆம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. அங்கு அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மைதானத்தில் உள்ள விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், இந்திய அணி வீரர்கள் இன்று சவுத்தாம்டன் மைதானத்தில் தங்களது பயிற்சிகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜடேஜாவின் ட்விட்டர் பதிவில்,“சவுத்தாம்டனில் முதல் சுற்றுலா” என பதிவிட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
First outing in southampton #feelthevibe #india pic.twitter.com/P2TgZji0o8
— Ravindrasinh jadeja (@imjadeja) June 6, 2021
ஜடேஜா வெளியிடுள்ள இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now