Advertisement
Advertisement
Advertisement

கேட்சுகளை தவறவிட்டதே தோல்விக்கு காரணம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!

பஞ்சாப் அணிக்கெதிரான அதிர்ச்சி தோல்விக்கு பின் தோல்விக்கான காரணம் குறித்து கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் பேசியுள்ளார்.

Advertisement
RCB captain Faf Du Plessis in the post-match presentation!
RCB captain Faf Du Plessis in the post-match presentation! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 28, 2022 • 10:31 AM

15 ஆவது சீசனின் ஐபிஎல் திருவிழாவில் இரண்டாம் நாளான நேற்று இரண்டு போட்டிகள் என அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல் போட்டியில் மும்பையை வீழ்த்தி டெல்லி அணி வெற்றிபெற்றது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 28, 2022 • 10:31 AM

இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை பஞ்சாப் கிங்ஸ் எதிர்கொண்டது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஓபனராக களம் இறங்கிய ஃபாஃப் டு பிளெசிஸ் அதிரடியாக விளையாட, ஸ்கோர் வேகமாக அதிகரித்தது. 57 பந்துகளை விளையாடிய அவர், 7 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் என 88 ரன்களை குவித்தார்.

Trending

விராட் கோலியும் அவருடன் அதிரடி காட்டி, 29 பந்துகளில் 41 ரன்களை எடுத்தார். கடைசி ஓவர்களில் தினேஷ் கார்த்திக்கும் பந்தை அனைத்து பக்கமும் விளாசினார். இதனால் பெங்களூர் அணி 205 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அடுத்து, களம் இறங்கிய மயங்க் அகர்வாலும் ஷிக்கர் தவானும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். மயங்க் அகர்வால் 32 ரன்களில் ஆட்டமிழக்க, ஷிகர் தவான் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார். 22 பந்துகளில் 4 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் என அதிரடியாக விளையாடிய ராஜபக்ஷே, சிராஜ் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். மேலும் ராஜ் பாவா ரன் எதும் எடுக்காமலும், லியாம் லிவிங்ஸ்டன் 19 ரன்களுடனும் வெளியேற ஆட்டம் பெங்களூர் அணி பக்கம் திரும்பியது.

இருந்தாலும், இறுதி கட்டத்தில் ஆட்டம் இரண்டு அணிகளுக்கும் சாதகமாக மாறி மாறி சென்றதால் ரசிகர்களை இருக்கையின் நுணிக்கே வர வழைத்தது. ஒடியன் ஸ்மித்தும், ஷாருக் கானு்ம் இறுதியில் சிக்ஸர் மழையை பொழிய, பஞ்சாப் கிங்ஸ் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதைப்பற்றி பேசிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், "நாங்கள் சிறப்பாக பேட்டிங் விளையாடினோம். பவர்பிளே எங்களுக்கு நன்றாகவே அமைந்தது. முதல் 4 ஓவர்களில் பந்து நன்றாக சுழன்று வந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் பனி காரணமாக எங்கள் பந்துவீச்சாளர்களுக்கு சற்று கடினமாக இருந்தது. நாங்கள் பல கேட்ச்களை தவறவிட்டது பெரிய பிரச்சனையாக அமைந்தது. ஆட்டம் இரு திசைகளில் சென்றாலும் நாங்கள் மேட்சை ஒரு கட்டத்தில் எங்கள் பக்கம் வைத்திருந்தோம்.

ஒடியன் ஸ்மித் 8 ரன்களை எடுத்தபோது அவரின் கேட்சை நாங்கள் தவறவிட்டோம். கடைசியில் அவரும் ஷாருக்கானும்தான் பஞ்சாப் அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்தார்கள். இந்த பார்மட்டில் ஒவ்வொரு போட்டியும் வித்தியாசமானது. இனி வரும் போட்டிகளில் நன்றாக செயல்படுவோம்" எனத் தெரிவித்தார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement