Advertisement

ஐபிஎல் 2024: முக்கிய வீரர்களை கழட்டிவிட்ட ஆர்சிபி; குழப்பத்தில் ரசிகர்கள்!

வரவுள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ள நிலையில் ஆர்சிபி அணி 8 வீரர்களை விடுவித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan November 26, 2023 • 20:08 PM
ஐபிஎல் 2024: முக்கிய வீரர்களை கழட்டிவிட்ட ஆர்சிபி; குழப்பத்தில் ரசிகர்கள்!
ஐபிஎல் 2024: முக்கிய வீரர்களை கழட்டிவிட்ட ஆர்சிபி; குழப்பத்தில் ரசிகர்கள்! (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல் 17ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19ஆம் தேதி துபாயில் நடக்க உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க ஐபிஎல் நிர்வாகம் காலக்கெடு கொடுத்திருந்தது. 

இந்நிலையில் ஒவ்வொரு அணியும் விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஜோஷ் ஹசில்வுட், வநிந்து ஹசரங்கா, ஹர்ஷல் பட்டேல், கேதர் ஜாதவ், மைக்கேல் பிரேஸ்வேல், ஃபின் ஆலன், டேவிட் வில்லி, வெயின் பார்னல் ஆகிய 8 வீரர்களை விடுவித்துள்ளது. 

Trending


 

ஆர்சிபி தக்கவைத்த வீரர்கள்: ஃபாஃப் டு பிளெசிஸ், கிளென் மேக்ஸ்வெல், விராட் கோலி, ரஜத் படிதார், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜாக்ஸ், மஹிபால் லோம்ரோர், கர்ண் ஷர்மா, மனோஜ் பந்தேஜ், மயங்க் டகர், வைஷாக் விஜய் குமார், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு சர்மா, ராஜன் குமார்.

ஆர்சிபி விடுவித்த வீரர்கள்: ஜோஷ் ஹசில்வுட், வநிந்து ஹசரங்கா, ஹர்ஷல் பட்டேல், கேதர் ஜாதவ், மைக்கேல் பிரேஸ்வேல், ஃபின் ஆலன், டேவிட் வில்லி, வெயின் பார்னல்.  


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement