
Rishabh Pant Place in Danger as sanju Samson waiting for opportunity (Image Source: Google)
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ரிஷப் பண்ட் சொதப்பி வருகிறார்.
ஐபிஎல் தொடரிலேயே ரிஷப் பந்த் எடுத்த 20, 30 ரன்களை பெரிய ஸ்கோராக மாற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது அந்த 20, 30 ரன்களை கூட ரிஷப் பண்ட் எடுக்கவில்லை. கேப்டன் பொறுப்பை ஏற்றதால் ரிஷப் பந்த்க்கு அழுத்தம் ஏற்பட்டு, அது பேட்டிங்கில் பாதிக்கப்படுவதாக தெரிகிறது.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 29 ரன்கள் எடுத்த பந்த், 2ஆவது டி20 போட்டியில் 5 ரன்களும், 3ஆவது டி20 போட்டியில் 6 ரன்களும் எடுத்துள்ளார். இந்திய அணியின் முக்கிய வீரராக கருதப்படும் ரிஷப் பந்த், அவருடைய சர்வதேச டி20 ஸ்ட்ரைக் ரேட்டையே 125 என்ற அளவில் தான் வைத்துள்ளார்.