
மும்பை வான்ஹடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது. 188 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி, 20ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்து 11 ரன்களில் தோல்வி அடைந்தது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ரிஷி தவணுக்கு இது முதல் ஐபிஎல் போட்டியாகும். இந்த ஆட்டத்தில் சிறப்பாகப் பந்துவீசிய ரிஷி தவண் ஏறக்குறைய 6 ஆண்டுகளுக்குப்பின் ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ளார். இதற்கு முன் கடந்த 2016ம் ஆண்டு இதேபஞ்சாப் அணியில் ரிஷி தவண் தேர்வு செய்யப்பட்டாலும் அப்போது ஆடவில்லை. இப்போதுதான் முதல்முறையாக ரிஷி தவண் வாய்ப்புப் பெற்றார்.
இந்த ஆட்டத்தில் ரிஷி தவண் 4 ஓவர்கள் வீசி 39 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இக்கட்டான நேரத்தில் தோனியின் விக்கெட்டையும், தொடக்கத்தில் துபே விக்கெட்டையும் தவண் எடுத்துக் கொடுத்தார்.