Advertisement

64 பந்துகளில் 144 ரன்கள்; பயிற்சியில் அதிரடியை காட்டும் ரியான் பராக் - காணொளி

ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி வீரர் ரியான் பராக் பயிற்சி ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Advertisement
64 பந்துகளில் 144 ரன்கள்; பயிற்சியில் அதிரடியை காட்டும் ரியான் பராக் - காணொளி
64 பந்துகளில் 144 ரன்கள்; பயிற்சியில் அதிரடியை காட்டும் ரியான் பராக் - காணொளி (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 19, 2025 • 10:42 PM

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 19, 2025 • 10:42 PM

அதிலும் இந்த முறை சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீது கூடுதல் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கடந்த இரு சீசன்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராயல்ஸ் அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இதனால் இம்முறை கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக ராயல்ஸ் அணியும் பார்க்கப்படுகிறது. இதற்காக அந்த அணி வீரர்கள் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர்.

Trending

அந்தவகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சி போது அந்த அணியின் நட்சத்திர வீரர் ரியான் பராக் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு காணொளி ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில் ரியான் பராக் 64 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 144 ரன்கள் எடுத்ததாக பதிவுசெய்துள்ளார். மேற்கொண்டு அவரின் இந்த இன்னிங்ஸில் 16 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார்.

மேற்கொண்டு ரியான் பராக்கின் இந்த அதிரடியான ஆட்டத்தை பார்த்த அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ‘சபாஷ் மச்சா’ என்று பாராட்டியுள்ளார். அதேசமயம் சக வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரெல் ஆகியோரும் ரியான் பராக்கை பாராட்டுவது அக்காணொளியில் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளியிட்டுள்ள இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rajasthan Royals (@rajasthanroyals)

ரியான் பராக் கடந்த ஐந்து சீசன்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு பகுதியாக இருந்து வருகிறார். இருப்பினும், கடந்த ஐபிஎல் தொடரில் தான் அவர் தனது திறனை நிரூபித்தார். கடந்த ஐபிஎல் சீசனில் 16 போட்டிகளில் 52 என்ற சராசரியும் 573 ரன்களைச் சேர்த்திருந்தார். இதன்மூலம் அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது. மேலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர் சர்வதேச கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Funding To Save Test Cricket

ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரான் ஹெட்மையர், சந்தீப் சர்மா, ஜோஃப்ரா ஆர்ச்சர், வநிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷனா, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேய சிங், நிதிஷ் ராணா, துஷார் தேஷ்பாண்டே, சுபம் துபே, யுத்வீர் சரக், ஃபசல்ஹக் ஃபரூக்கி, வைபவ் சூர்யவன்ஷி, குவேனா மபாகா, குணால் ரத்தோர், அசோக் சர்மா.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement