
Rizwan, Shadab sledge Suryakumar Yadav during India vs Pakistan Asia Cup Super 4, India batter’s res (Image Source: Google)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதி வருகின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் அதிரடியான துவக்கம் கொடுத்தனர். இருவரும் தலா 28 ரன்கள் எடுத்து கொடுத்துவிட்டு விக்கெட்டை இழந்தனர்.
இதன்பின் களத்திற்கு வந்த சூர்யகுமார் யாதவ் (13), ரிஷப் பந்த் (14), ஹர்திக் பாண்டியா (0) மற்றும் தீபக் ஹூடா (16) ஆகியோர் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினர்.