Cricket Image for 90’ஸ் ஹீரோக்கள் ரீஎண்ட்ரி; காத்திருப்பில் ரசிகர்கள்! (Image Source: Google)
சாலை பாதுகாப்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு லெஜண்ட் அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. கரோனா ஊரடங்கு காரணமாகப் போட்டிகளை முழுமையாக நடத்தி முடிக்க இயலவில்லை.
இந்நிலையில், கரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வருவதையடுத்து மார்ச் மாதம் முதல் மீண்டும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டிகளை ராய்பூரில் நடத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி இன்று நடைபெறும் சாலை பாதுக்காப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடரில் இந்தியா லெஜண்ட்ஸ் அணி, வங்கதேச லெஜண்ட்ஸ் அணியுடன் மோதவுள்ளது.