
சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களைக் கொண்டு நடத்தப்பட்டு வரும், சாலை பாதுகாப்பு உலக டி20 கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இத்தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா லெஜண்ட்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தில் இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணி, தென்ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, தென்ஆப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணியில் வேன் வைக் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அணிக்கு உதவினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் சரிவர சோபிக்காததால், 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க லெஜண்ட்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களை மட்டுமே எடுத்தது.