
ஆசிய கோப்பை 2023 தொடரானது ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த முறை பாகிஸ்தான் ஆசிய கோப்பையை நடத்த இருந்தாலும் பாதுகாப்பு காரணங்களுக்கான பாகிஸ்தானுக்கு இந்திய அணியை அனுப்ப பிசிசிஐ மறுத்துவிட்டது. பல பேச்சுவார்த்தை, சர்ச்சைகளுக்கு பிறகு, பாகிஸ்தானுடன் இணைந்து இலங்கையில் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ஆசிய கோப்பையில் முதல் 5 போட்டிகள் பாகிஸ்தானிலும், மீதம் எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்திய அணி தான் விளையாட இருக்கும் அனைத்து போட்டிகளிலும் இலங்கையில் மட்டுமே விளையாடவுள்ளது. தொடரின் இறுதிப் போட்டியும் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்கும் ஆசியக் கோப்பை 2023 போட்டியில் கலந்து கொள்ளுமாறு பிசிசிஐக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்திருந்தது. இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ரோஜர் பின்னி மற்றும் அதன் துணை தலைவர் ராஜூவ் சுக்லா ஆகியோர் பாகிஸ்தான் செல்லவுள்ளனர்.