
'Rohit Sharma decided, today I will toy with Sri Lanka': Pragyan Ojha (Image Source: Google)
இந்தியா - இலங்கை இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, இஷான் கிஷன் (89) மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் (57) ஆகிய இருவரின் அதிரடி அரைசதங்களால் 20 ஓவரில் 199 ரன்களை குவித்தது.
200 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இலங்கை அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததால், அணியின் ஸ்கோர் வேகமெடுக்கவில்லை. எனவே 137 ரன்கள் மட்டுமே அடித்து 62 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்த போட்டியின் எந்த சூழலிலுமே இலங்கை அணி இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்தவில்லை. ஆட்டம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை இந்திய அணியே இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தியது.