Advertisement

இந்த வெற்றியை பற்றி பேசுவதற்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை - ரோவ்மன் பாவெல்!

அடுத்தடுத்து இரு தோல்விக்கு பின் எங்களிடம் எந்த அச்சமும் இல்லை. இதுபோன்ற ஒரு வெற்றிக்காக தான் வெஸ்ட் இண்டீஸ் மக்கள் நீண்ட ஆண்டுகளாக காத்திருந்தார்கள் என்று வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோவ்மன் பாவெல் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan August 14, 2023 • 14:46 PM
இந்த வெற்றியை பற்றி பேசுவதற்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை - ரோவ்மன் பாவெல்!
இந்த வெற்றியை பற்றி பேசுவதற்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை - ரோவ்மன் பாவெல்! (Image Source: Google)
Advertisement

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அங்கு முதலில் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இந்திய அணி கைப்பற்றியது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. அதில் முதல் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், அடுத்த 2 போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்று இருந்தது.

இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5ஆவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நேற்று நடந்தது. அதில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது. மேலும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

Trending


இந்த வெற்றிக்கு பின் ரோவ்மன் பாவெல் பேசுகையில், “இந்த வெற்றியை பற்றி பேசுவதற்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை. நேற்று மாலை அணியினர் அனைவரும் சந்தித்து ஆலோசித்தோம். பயிற்சியாளர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது என்றே சொல்வேன். அடுத்தடுத்து இரு தோல்விக்கு பின் எங்களிடம் எந்த அச்சமும் இல்லை. இதுபோன்ற ஒரு வெற்றிக்காக தான் வெஸ்ட் இண்டீஸ் மக்கள் நீண்ட ஆண்டுகளாக காத்திருந்தார்கள்.

நான் எப்போதும் தனி வீரரின் சாகசங்களுக்கு ரசிகனாக இருப்பவன். எந்த வீரர் தனியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அதற்கான பலன் அணிக்கு தான் கிடைக்கும். அதுபோன்ற சாகசங்களை செய்யக் கூடிய வீரர் தான் நிக்கோலஸ் பூரன். நாங்கள் அவரிடம் 3 சிறந்த இன்னிங்ஸ்களை ஆட வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். அதனை பூரன் சிறப்பாக செய்து முடித்துள்ளார். ஏனென்றால் அனைத்து போட்டிகளிலும் ஒரு வீரரால் அவ்வளவு சிறப்பாக செயல்பட முடியாது.

அதேபோல் வலிமையான இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை தடுத்து நிறுத்திய எங்கள் பவுலர்களை பாராட்டியே ஆட வேண்டும். அதேபோல் ரசிகர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். நாங்கள் தோல்வியடைந்த போது கூட ரசிகர்கள் எங்களை பாராட்டவே செய்தார்கள். மைதானத்திற்கு வந்து நேரடியாக மட்டுமல்லாமல், சோசியல் மீடியாவிலும் கூட பாராட்டுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
TAGS WI Vs IND