
Royal Challengers Bangalore to announce Faf du Plessis as NEW CAPTAIN & NEW JERSEY on March 12 (Image Source: Google)
ஐபிஎல் 2021 போட்டிக்குப் பிறகு ஆர்சிபி அணி கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகினார். ஆர்சிபி அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை.விராட் கோலி தலைமையில் 2016இல் ஆர்சிபி அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் சஞ்சய் பங்கர், ஆர்சிபி அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2021 போட்டியில் ஆர்சிபி அணியின் பேட்டிங் ஆலோசகராக அவர் பணியாற்றினார்.
மார்ச் 12 அன்று புதிய கேப்டனின் பெயரை அறிவிக்கவுள்ளதாக ஆர்சிபி அணி அதிகாரபூர்வமாகத் தகவல் தெரிவித்துள்ளது. ஐபிஎல் 2022 போட்டியில் விளையாடும் 10 அணிகளில் ஆர்சிபி அணியின் கேப்டன் மட்டுமே இதுவரை தேர்வு செய்யப்படவில்லை.