
நேற்று அயர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றி இருக்கிறது. நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ருதுராஜ் ஆடுகளம் மெதுவாக இருந்ததை உணர்ந்து மிகவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 43 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.
வருகின்ற பேட்ஸ்மேன்களை இணைத்துக் கொண்டு அவர் ஒரு சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதே சமயத்தில் அடித்து ஆட முயற்சி செய்த பொழுது அவரது விக்கட்டை இழந்தார். நேற்றைய ஆட்டத்திற்கு பிறகு அவருடைய ஆட்ட அணுகுமுறை மற்றும் கேப்டன்சி எப்படியானது என்பது குறித்து பேசி இருக்கிறார்.
இதுகுறித்து பேசிய ருதுராஜ் கெய்க்வாட், “கேப்டன்சி என்பது மிகவும் சிக்கலான விஷயம் என்று நான் நினைக்கிறேன். தோனி எப்பொழுதும் சொல்வது என்னவென்றால் ஒரு நேரத்தில் ஒரு விளையாட்டு பற்றி மட்டும் நினைத்து விளையாடுங்கள். தற்போதைய தருணத்தில் இருங்கள். எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். எல்லோரும் இங்கு ஹைப் உருவாக்குவார்கள். நான் சமூக ஊடகங்களை பார்த்து என்னைப் பற்றி யார் என்ன சொல்கிறார்கள் என்று கேட்கக்கூடிய நபர் கிடையாது.